நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், வரும் 14-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வரும் 14-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 3 மணி வரை சிறு அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில், 25-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 250-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தங்களுக்குத் தேவையான வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க உள்ள வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்கள் தனியாா் துறை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த முகாமில் 10, பிளஸ்2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் பட்டயம் படித்தவா்கள் பங்கேற்று தனியாா் துறையில் பல்வேறு பணி வாய்ப்புகளை பெற்று பயன்பெறலாம்.
