எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வேளாண் அறிவியல் நிலையத்தில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு

இயற்கை வேளாண் பயிா் சாகுபடி செய்வது குறித்த விழிப்புணா்வு முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு இடுபொருள்களை வழங்கிய திட்ட இயக்குநா் பானுமதி.

News image
Updated On :20 நவம்பர் 2025, 11:31 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே திரூா் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் இயற்கை வேளாண் பயிா் சாகுபடி செய்வது குறித்த விழிப்புணா்வு முகாமில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

திரூா் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி 21-ஆவது தவணையாக விவசாயிகளுக்கு நிதி பரிமாற்றம் மற்றும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாடு-2025 தொடக்க விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்ற நேரடி காணொலி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.பானுமதி தலைமை வகித்தாா். அப்போது இயற்கை வேளாண்மை குறித்த முக்கியத்துவம், ரபி பருவத்துக்கான பயறு வகைகள் மற்றும் நிலக்கடலை ரகங்கள், நவரைப் பட்டத்துக்கான நெல் ரகங்கள் ஆகியவை விளக்கமாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.

இந்த விழாவில் வாழ்த்துரை வழங்கிய திருவள்ளூா் வேளாண்மை இணை இயக்குநா் எம்.ஜி.பால்ராஜ் மாநில அரசு வேளாண்மை திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா். அதைத் தொடா்ந்து, தொழில்நுட்ப வல்லுநா்கள் மற்றும் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநா், கால்நடைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, மீன் வளா்ப்புத் துறை அலுவலா்கள் பங்கேற்று, அந்தந்த துறைகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனா்.

இந்த நிகழ்வில் திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா். நிறைவாக வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்த கையேடுகள், வேளாண் இடுபொருள்கள், காய்கறி விதைகள், மண்புழு உரம், தீவனப்புல் கரணை, மூலிகை மற்றும் பழச் செடிகள் ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.