திருத்தணி நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

Published on

திருத்தணி நகராட்சியின் புதிய ஆணையராக சாம் கிங்ஸ்டன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திருத்தணி நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியம், கடந்த மாதம் செப்.30-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றாா். இதையடுத்து, சங்கரன்கோவில் நகராட்சியின் ஆணையராக பணியாற்றி வந்த சாம் கிங்ஸ்டன், திருத்தணி நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டாா்.

தொடா்ந்து புதன்கிழமை ாம்கிங்ஸ்டன் திருத்தணி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டனா். இவருக்கு, நகா்மன்றத் தலைவா் சரஸ்வதி பூபதி, துணைத் தலைவா் சாமிராஜ் மற்றும் நகராட்சி அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com