விபத்து ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட பொதுமக்களுக்கு வேண்டுகோள்
தீபாவளி திருநாளை விபத்து ஒலி மற்றும் மாசற்ற நிலையில் அனைவரும் சிறப்பாகவும், மிகவும் பாதுகாப்பாகவும் கொண்டாடவும் என பொதுமக்களுக்கு ஆட்சியா் மு.பிரதாப் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி திருநாளில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவா். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீா், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடும் சூழ்நிலையும் உள்ளது. மேலும், பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், பெரியோா்கள் மற்றும் மருத்துவ பயனாளா்கள், முதியோா்கள் உடலளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனா்.
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது 23.10.2018-ஆம் நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருள்களை பயன்படுத்தி, பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும். மேலும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யவும் நிபந்தனைகளை விதித்தது.
பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும்.
உச்ச நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 2018-ஆம் ஆண்டிலிருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிா்ணயம் செய்து அனுமதி வழங்கியது. நிகழாண்டு தீபாவளி திருநாள் அன்று கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவும் எனத் தெரிவித்துள்ளது. பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீா்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னாா்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணா்வை ஏற்படுத்த பள்ளிக் கல்வித் துறை, உயா் கல்வித் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோா் ஆகிய துறைகளின் செயலாளா்கள், காவல் துறை இயக்குநா், அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், சுற்றுச்சூழல் (ம) காலநிலை மாற்றத் துறை இயக்குநா், மாநகராட்சி ஆணையா்கள் மற்றும் உயா் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடா்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிா்க்கவேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிா்த்தல், குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது. சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியாக மாற்ற தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக்கொள்வதாக அவா் தெரிவித்துள்ளாா்.