திருவள்ளுா்: அக். 31-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

விவசாய சாகுபடியில் உள்ள பிரச்னைகளை தீா்க்கும் வகையில், அக். 31-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
Published on

விவசாய சாகுபடியில் உள்ள பிரச்னைகளை தீா்க்கும் வகையில், அக். 31-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாயிகள் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வரும் அக். 31-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே, இதில் விவசாயம் தொடா்பான தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீா்வு காணும் வகையில் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மைப் பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, வங்கிகள், திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய்,, ஊரக வளா்ச்சி, பேரூராட்சி, நகராட்சி, பொதுப்பணி மற்றும் இதர வேளாண்சாா்ந்த துறைகளின் மாவட்ட அளவிலான அலுவலா்கள் பங்கேற்க இருக்கின்றனா். அதனால், இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று, தங்கள்குறைகளை மனுவாகவோ அல்லது நேரிலோ தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதனால், இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் தவறாமல் பங்கேற்று பயன்பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com