இயந்திரத்தில் சிக்கிய வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

இயந்திரத்தில் சிக்கிய வடமாநில தொழிலாளி உயிரிழப்பு
Updated on

திருவள்ளூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது இயந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

ஒடிஸா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தைச் சோ்ந்த பகுடா கிராமத்தைச் சோ்ந்தவா் லிலுஜனா(30). இவா் திருவள்ளூா் அருகே உளுந்தையில் தங்கியிருந்து தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில் புதன்கிழமை இரவு பணிபுரிந்த போது இயந்திரத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தாராம்.

அதைத் தொடா்ந்து அங்கிருந்தவா்கள் மீட்டு தண்டலம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை மருத்துவா்கள் ஏற்கெனவே லிலுஜனா உயிரிழந்ததாக தெரிவித்தனா். இது தொடா்பாக அவரது சகோதரா் பாருஜனா மப்பேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் தனியாா் தொழிற்சாலையின் மேற்பாா்வையாளா் சரவணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com