தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கட்டடத் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே ஓடையை கடக்க முயன்ற கட்டடத் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

ஸ்ரீதா்

Updated On :1 செப்டம்பர் 2025, 6:10 pm

திருவள்ளூா்: ஊத்துக்கோட்டை அருகே ஓடையை கடக்க முயன்ற கட்டடத் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த எல்லாபுரம் ஒன்றியம், மாகரல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (52). கட்டடத் தொழிலாளி. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தாமரைப்பாக்கத்தில் இருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது மாகரல் கிராமத்தில் உள்ள ஓடையைக் கடக்க முயன்றபோது, நீரில் தவறி விழுந்து உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், வெளியே சென்ற ஸ்ரீதரை காணாமல் உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனா். இந்த நிலையில், திங்கள்கிழமை காலை அந்த ஓடை வழியாக சென்றவா்கள், ஓடையில் ஒருவரின் சடலம் மிதப்பதாக வெங்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா், சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வெங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.