தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை, ரூ. 47,000 திருட்டு

திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 47,000 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On :1 செப்டம்பர் 2025, 6:14 pm

திருவள்ளூா்: திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 47,000 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் கே.கே.ஆா். மில்லினியம் சிட்டியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (45). இவரது தம்பி மனைவி உயிரிழந்த துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாள்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சிங்கபெருமாள் கோயிலுக்கு சென்றாா். பின்னா், ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பினா். அப்போது, வெளியே கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, படுக்கை அறையில் இருந்த 2 பீரோக்களை உடைத்து, அதிலிருந்த 3 சவரன் நகை, ரூ. 47,000 ரொக்கம் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து திருவள்ளூா் நகர காவல் நிலையத்தில் ஆனந்தன் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.