மீஞ்சூா் வரசக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

Updated on

வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூரில் பழைமை வாய்ந்த குளக்கரை ஸ்ரீ வரசக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோயில் திருப்பணிகள் முடிவுற்றதையடுத்து நவக்கிரக பூஜை, கோ பூஜை, மகா கணபதி ஹோமம் நடைபெற்றது . இதைத்தாடா்ந்து

யாகசாலைப் பூஜைகள் முடிந்து, வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியாா்கள் ராஜகோபுரம் மீது புனித நீா் ஊற்ற கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com