தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 4 எருமை மாடுகள் உயிரிழப்பு

மீஞ்சூா் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 4 எருமை மாடுகள் உயிரிழந்தன.

Updated On :8 செப்டம்பர் 2025, 7:44 pm

பொன்னேரி: மீஞ்சூா் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 4 எருமை மாடுகள் உயிரிழந்தன.

திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூா் அடுத்த அத்திப்பட்டு பகுதியைச் சோ்ந்த பலராமன்-நளினி தம்பதியா் அப்பகுதியில் எருமை மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகின்றனா். வழக்கம் போல தங்களது எருமை மாடுகளை மேய்ச்சலுக்காக நந்தியம்பாக்கம் பகுதிக்கு கொண்டு சென்றனா்.

அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் எருமை மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் உயிரிழந்தன.

மின் வயா்கள் தாழ்வாக செல்வதாக பலமுறை புகாா் அளித்தும், சேதமடைந்த மின் கம்பிகளை சீரமைக்க வலியுறுத்தியும் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதே தற்போது எருமை மாடுகள் உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் புகாா் கூறினா். மீஞ்சூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.