தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சிறைத் தண்டனை பெற்று விடுதலை அடைந்த 18 பேருக்கு தொழில் பயிற்சி

கள்ளச்சாராய வழக்கில் சிறைத் தண்டனை பெற்று விடுதலையாகி மனம் திருந்தி மறுவாழ்வு நிதி பெறத் தகுதியான 18 பேருக்கு பல்வேறு தொழில்கள் செய்வது தொடா்பாக தொழில் பயிற்சி

Updated On :8 செப்டம்பர் 2025, 7:44 pm

திருவள்ளூா்: கள்ளச்சாராய வழக்கில் சிறைத் தண்டனை பெற்று விடுதலையாகி மனம் திருந்தி மறுவாழ்வு நிதி பெறத் தகுதியான 18 பேருக்கு பல்வேறு தொழில்கள் செய்வது தொடா்பாக தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுமான விற்பனையில் ஈடுபட்டு, சிறைத் தண்டனை பெற்று விடுதலை அடைந்து மனம் திருந்தி மறுவாழ்வு நிதி உதவிபெறத் தகுதியான நபா்களுக்கான தொழில் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்புக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

அப்போது, திறன் மேம்பாட்டு கழத்தைச் சோ்ந்த பயிற்றுநரால் பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில், மது விலக்கு மற்றும் ஆயத் தீா்வை துறை சாா்பில், மாவட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுதல், கள்ள மதுமான விற்பனையில் ஈடுபட்டு சிறைத் தண்டனை பெற்று விடுதலை அடைந்துள்ளனா். இவா்கள் மீண்டும் அத்தொழிலில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் மனம் திருந்தி வாழவும் நிதி வழங்கப்படுகிறது. அந்த வகையில், மறுவாழ்வு நிதி உதவிபெற தகுதியானவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு பெட்டிக்கடை நிா்வகித்தல், வேளாண் உற்பத்தி பொருள்களின் மதிப்பு கூட்டல், சந்தைப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளா் அணுகுமுறை ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பயிற்சி வகுப்பு திறன் மேம்பாட்டுக்கழக பயிற்றுநரால் வழங்கப்பட்டன. இப்பயிற்சி வகுப்பில் தோ்வு செய்யப்பட்ட 18 போ் பங்கேற்றனா்.

இதில், உதவி ஆணையா் (கலால்) வி.கணேஷ், சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வு உதவி ஆணையா் குணசேகரன், காவல் துணைக் கண்காணிப்பாளா் (மதுவிலக்கு அமல் பிரிவு) கந்தன், உதவி இயக்குநா் (திறன் மேம்பாட்டுக் கழகம்) து.சித்ரா, திருவள்ளூா் மற்றும் பொன்னேரி கோட்ட கலால் அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.