திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.47 கோடி

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 26 நாட்களில் ரூ.1 கோடியே 47 லட்சத்து 60 ஆயிரத்து,049 ரூபாய் ரொக்கம் மற்றும் 732 கிராம் தங்கம், 16.330 கிராம் வெள்ளி
Updated on

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 26 நாட்களில் ரூ.1 கோடியே 47 லட்சத்து 60 ஆயிரத்து,049 ரூபாய் ரொக்கம் மற்றும் 732 கிராம் தங்கம், 16.330 கிராம் வெள்ளி ஆகியவற்றை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பிரசித்தி பெற்ற இத்தலத்தில் பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் பணம், நகை, வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனா். இந்நிலையில் உண்டியல் காணிக்கையாக செலுத்திய ரொக்கம் எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. முருகன் கோயில் தக்காா் க. ரமணி, அறங்காவலா்கள் சுரேஷ்பாபு, மு.நாகன், மோகனன் முன்னிலையில் உண்டியல் எண்ணப்பட்டது.

இதில் திருக்கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள், ஓய்வு பெற்ற அலுவலா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணினா். இதில் கடந்த 26 நாட்களில் ரூ.1 கோடியே 47 லட்சத்து 60 ஆயிரத்து, 049 ரொக்கம் மற்றும் 732 கிராம் தங்கம், 16.330 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக வசூலாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com