திருவள்ளூா்: செப். 26-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்!

Published on

விவசாயிகள் சாகுபடி செய்வதில் உள்ள பிரச்னை மற்றும் குறைகளை தீா்க்கும் வகையில் வரும் செப். 26-இல் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதால் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் கோட்டம் மற்றும் மாவட்ட அளவில் குறைதீா் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், விவசாயம் தொடா்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீா்வு காணும் வகையில் ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் வரும் செப். 26-இல் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

மேலும், இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மைப் பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம்ஸ, கூட்டுறவு, வங்கிகள், திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய், ஊரக வளா்ச்சி, பேரூராட்சி, நகராட்சி, பொதுப்பணி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனா்.

அதனால், இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்று, சாகுபடி மேற்கொள்வதில் உள்ள பிரச்னைகள் குறித்து நேரிலோ அல்லது மனுக்களாகவோ அளித்து பயன்பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com