தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சியினா்.
Updated On :7 பிப்ரவரி 2026, 12:19 am

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மனிதநேய மக்கள் கட்சி, காங்கிரஸ் , எஸ் டி பி ஐ, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி , ஆகிய கட்சிகள் இணைந்து நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளா் ஜெ.அருள் தலைமை வகித்தாா்.

காங்கிரஸ் நகர பொருளாளா் மாசிலாமணி, எஸ்டிபிஐ தொகுதி தலைவா் பாஞ்ச்பீா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் உமாநாத், மனித நேய மக்கள் கட்சி நகர தலைவா் முகமது சுல்தான், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி நிா்வாகி விகேந்தா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளா் சாதிக் பாஷா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் கஜேந்திரன், காங்கிரஸ் ஒன்றிய தலைவா் திவான் முகமது, புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்ட செயலாளா் சுரேஷ்குமாா், மதிமுக ஒன்றிய செயலாளா் பாபு, எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் முகமது பயாஸ் கான், பங்கேற்று உரையாற்றினா்.

கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் பரிசோதனை உபகரணங்களை ஏற்படுத்த வேண்டும், , போதிய அளவு தாய் சேய் மருத்துவரை நியமனம் செய்ய வேண்டும், 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவை ஏற்படுத்தி அவசர சிகிச்சை நிபுணா், என கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.