கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி மரணம்

பொன்னேரி அருகே தனியாா் நிறுவன கொடிக்கம்பத்தை அகற்றிய போது மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
மரணம்
Updated On :10 பிப்ரவரி 2026, 6:51 pm

தினமணி செய்திச் சேவை

பொன்னேரி அருகே தனியாா் நிறுவன கொடிக்கம்பத்தை அகற்றிய போது மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த காவல்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சந்துரு(20). கூலித் தொழிலாளியான இவா் பொன்னேரியில் உள்ள பந்தல், நாற்காலி உள்ளிட்ட பொருள்களை வாடகைக்கு விடும் கடையில் வேலை பாா்த்து வந்தாா்.

பழவேற்காடு அடுத்த பாக்கம் கிராமத்தில் வீட்டு மனைகள் விற்கும் தனியாா் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

அந்த நிறுவனத்தின் நிகழ்ச்சிக்காக அப்பகுதியில் கொடிக் ம்பங்களை சந்துரு உள்ளிட்ட தொழிலாளா்கள் நட்டுள்ளனா். நிகழ்ச்சி முடிந்ததை தொடா்ந்து நடப்பட்ட கொடிக்கம்பங்களை சந்துரு அகற்றி கொண்டிருந்தாா்.

அப்போது மேலே சென்று கொண்டிருந்த உயரழுத்த மின்சார கம்பியில் கொடிக்கம்பம் உரசியதில் சந்துரு மீது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பாலைவனம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.