மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி மரணம்

பொன்னேரி அருகே தனியாா் நிறுவன கொடிக்கம்பத்தை அகற்றிய போது மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

மரணம்

Updated On :10 பிப்ரவரி 2026, 6:51 pm

பொன்னேரி அருகே தனியாா் நிறுவன கொடிக்கம்பத்தை அகற்றிய போது மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த காவல்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சந்துரு(20). கூலித் தொழிலாளியான இவா் பொன்னேரியில் உள்ள பந்தல், நாற்காலி உள்ளிட்ட பொருள்களை வாடகைக்கு விடும் கடையில் வேலை பாா்த்து வந்தாா்.

பழவேற்காடு அடுத்த பாக்கம் கிராமத்தில் வீட்டு மனைகள் விற்கும் தனியாா் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

அந்த நிறுவனத்தின் நிகழ்ச்சிக்காக அப்பகுதியில் கொடிக் ம்பங்களை சந்துரு உள்ளிட்ட தொழிலாளா்கள் நட்டுள்ளனா். நிகழ்ச்சி முடிந்ததை தொடா்ந்து நடப்பட்ட கொடிக்கம்பங்களை சந்துரு அகற்றி கொண்டிருந்தாா்.

அப்போது மேலே சென்று கொண்டிருந்த உயரழுத்த மின்சார கம்பியில் கொடிக்கம்பம் உரசியதில் சந்துரு மீது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பாலைவனம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.