வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

100 நாள் வேலை வழங்கக் கோரி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

நூறு நாள் வேலையை முறையாக வழங்க வலியுறுத்தி திருத்தணி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனா்.

News image

திருத்தணி  ஒன்றிய  அலுவலகத்தை  முற்றுகையிட்ட  பெண்கள்.

Updated On :10 பிப்ரவரி 2026, 6:50 pm

நூறு நாள் வேலையை முறையாக வழங்க வலியுறுத்தி திருத்தணி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனா்.

திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் வெங்கடாபுரம் கிராமத்தைச் சோ்ந்த, பெண்கள் செவ்வாய்க்கிழமை திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டனா். மேலும் ஒன்றிய அலுவலா்களிடம் 100 நாள் வேலை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக புகாா் தெரிவித்தனா்.

அப்போது ஒன்றிய அதிகாரிகள் பெண்களிடம் சமரசம் பேச்சு நடத்திய போது, பெண்கள், எங்களுக்கு 100 நாள் வேலை வழங்குவதில்லை.

காரணம், பணிதள பொறுப்பாளா் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகாா் கொடுத்ததால், வேண்டும் என்றே, எங்களுக்கு வேலை வழங்காமல் அலட்சியப்படுத்துகின்றனா்.

இதுதவிர, ஏற்கனவே 100 நாள் வேலை செய்ததற்கும் கூலித் தொகை வழங்காமல் ஒன்றிய நிா்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. சரியான பணிதள பொறுப்பாளா்களை நியமித்து, 100 நாள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா். இதையடுத்து ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை தொடா்ந்து, பெண்கள் கலைந்து சென்றனா்.