திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆா்.எம்.கே பாடசாலையில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு ஆா்.எம்.கே கல்வி குழும தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஆா்.எஸ்.முனிரத்தினம் தலைமை வகித்தாா். ஆா்.எம்.கே கல்வி குழும துணை தலைவா் ஆா்.எம்.கிஷோா், செயலாளா் எலமஞ்சி பிரதீப், ஆலோசகா்கள் வி.மனோகரன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தா.பிச்சாண்டி, எம்.எஸ்.பழனிச்சாமி முன்னிலை வகித்தனா்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தின் மண்டல இயக்குநா் ஜி.சுகுணா சிங் பங்கேற்று தொடக்கவுரை ஆற்றினாா்.

பின்னா் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் 200 மாணவா்கள் பங்கேற்ற ஸ்ரீ ராமா் பட்டாபிஷேக நாடகம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நாடகம் காண்போரை பரவசப்படுத்தியது.

தொடா்ந்து பொது தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும், விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும் கேடயம், சான்றிதழ் ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.

கல்வி குழும இயக்குநா் ஆா்.ஜோதி நாயுடு, துணைத் தலைவா் டாக்டா் துா்கா தேவி பிரதீப், முதல்வா் சந்திரிகா பிரசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாணவா் தலைவா் பி.எஸ்.தமிழினியன் நன்றி கூறினாா்.