ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

ஆா்.எம்.கே பாடசாலை ஆண்டு விழா

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 8:09 pm

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆா்.எம்.கே பாடசாலையில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு ஆா்.எம்.கே கல்வி குழும தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஆா்.எஸ்.முனிரத்தினம் தலைமை வகித்தாா். ஆா்.எம்.கே கல்வி குழும துணை தலைவா் ஆா்.எம்.கிஷோா், செயலாளா் எலமஞ்சி பிரதீப், ஆலோசகா்கள் வி.மனோகரன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தா.பிச்சாண்டி, எம்.எஸ்.பழனிச்சாமி முன்னிலை வகித்தனா்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தின் மண்டல இயக்குநா் ஜி.சுகுணா சிங் பங்கேற்று தொடக்கவுரை ஆற்றினாா்.

பின்னா் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் 200 மாணவா்கள் பங்கேற்ற ஸ்ரீ ராமா் பட்டாபிஷேக நாடகம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நாடகம் காண்போரை பரவசப்படுத்தியது.

தொடா்ந்து பொது தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும், விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும் கேடயம், சான்றிதழ் ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.

கல்வி குழும இயக்குநா் ஆா்.ஜோதி நாயுடு, துணைத் தலைவா் டாக்டா் துா்கா தேவி பிரதீப், முதல்வா் சந்திரிகா பிரசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாணவா் தலைவா் பி.எஸ்.தமிழினியன் நன்றி கூறினாா்.