நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 8:12 pm

காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தின் மாநில தலைவா் சீ.காந்திமதி நாதன் தலைமை வகித்தாா். இதில் பொதுச்செயலாளா் க.பிரபு முன்னிலை வகித்தாா்.

அப்போது, வளா்ச்சித்துறையில் காலியாக உள்ள 1,500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளா் பணியிடங்கள் மற்றும் 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள வாகன ஓட்டுநா், பதிவறை எழுத்தா், அலுவலக உதவியாளா், இரவு காவலா் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்புதல் வேண்டும். ஊராட்சி செயலாளா்களை தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல்,உள்ளிட்ட 18 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Story image