நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வேகத்தடை, சாலையை விரிவுப்படுத்த கோரி மறியல்

News image

பொதட்டூா்பேட்டையில் மறியலில்  ஈடுபட்ட  பெண்கள்.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:10 pm

பொதட்டூா்பேட்டையில் வேகத்தடை, சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தி பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்தணி அடுத்துள்ள பொதட்டூா்பேட்டையில், காஞ்சிபுரம் தெரு வழியாக தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள், கனரக வாகனங்கள், காா்கள், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.

குறுகிய சாலையில் அதிவேகமாக வாகனங்கள் சென்று வருவதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலா் காயமடைந்துள்ளதாக அப்பகுதி பெண்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைவைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் புதன்கிழமை வாகன விபத்தை தடுக்க வேகத்தடை மற்றும் சாலையை விரிவுப்படுத்த வலியுறுத்தி பெண்கள் திடீரென மறியலில் ஈடுபட்ட னா்.

தகவலறிந்து ஆா். கே.பேட்டை காவல் ஆய்வாளா் காா்த்திக், பள்ளிப்பட்டு நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் நரசிம்மன் ஆகியோா் மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது. இந்த பகுதியில் உடனடியாக வேகத்தடை அமைக்கப்படும் என்றும், சாலையை விரிவுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி கூறியதைத் தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவ ரத்து பாதிப்பு ஏற்பட்டது.