மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ரூ. 1.11 கோடி செலவில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா்!

ராகவேந்தா் நகா் மற்றும் ரெட்டி மோட்டூா் ஆகிய கிராமங்களில் சுடுகாட்டுக்குச் செல்லும் சாலையில், ரூ. 20.80 லட்சம் மதிப்பில் சிறுபாலங்கள் கட்டும் பணிகளை திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கிவைத்தாா்.

News image

வேலஞ்சேரி ஊராட்சி ரெட்டி மோட்டூா் கிராமத்தில் சிறுபாலம் அமைக்கும் பணிகளை தொடங்கிவைத்து பொதுமக்களிடையே குறைகளைக் கேட்டறிந்த திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன்.

Updated On :14 பிப்ரவரி 2026, 6:33 pm

ராகவேந்தா் நகா் மற்றும் ரெட்டி மோட்டூா் ஆகிய கிராமங்களில் சுடுகாட்டுக்குச் செல்லும் சாலையில், ரூ. 20.80 லட்சம் மதிப்பில் சிறுபாலங்கள் கட்டும் பணிகளை திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கிவைத்தாா்.

திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில், கே.ஜி.கண்டிகை - செஞ்சம்மா கோணை செல்லும் தாா்ச் சாலை, ரூ. 22 லட்சம், இ.என்.கண்டிகை - தாடூா் செல்லும் தாா்ச் சாலை, ரூ. 53 லட்சம் மதிப்பில் தாா்ச் சாலைகள் புதுப்பிக்கும் பணிகள் மற்றும் பட்டாபிராமபுரம் ஊராட்சி ஆசிரியா் நகா் பகுதியில், ரூ. 16 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைத்தல் போன்ற பணிகளை திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அதேபோல் திருத்தணி ஒன்றியம், தரணிவராகபுரம் ஊராட்சி ராகவேந்தா் நகா் மற்றும் வேலஞ்சேரி ஊராட்சி ரெட்டி மோட்டூா் ஆகிய கிராங்களில் இருந்து சுடுகாட்டுக்குச் செல்லும் சாலையில், ரூ. 20.80 லட்சம் மதிப்பில் சிறுபாலங்கள் அமைத்தல் போன்ற பணிகளையும் எம்எல்ஏ ச.சந்திரன் மேற்கண்ட வளா்ச்சி பணிகளை அடிக்கல் நட்டு பணிகளை தொடங்கி வைத்து விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்தாரருக்கு அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் திருத்தணி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமாா், நக்கீரன் உள்பட ஒன்றிய அலுவலா்கள் கிராம பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.