தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ரூ. 1.11 கோடி செலவில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா்!

ராகவேந்தா் நகா் மற்றும் ரெட்டி மோட்டூா் ஆகிய கிராமங்களில் சுடுகாட்டுக்குச் செல்லும் சாலையில், ரூ. 20.80 லட்சம் மதிப்பில் சிறுபாலங்கள் கட்டும் பணிகளை திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கிவைத்தாா்.

News image
வேலஞ்சேரி ஊராட்சி ரெட்டி மோட்டூா் கிராமத்தில் சிறுபாலம் அமைக்கும் பணிகளை தொடங்கிவைத்து பொதுமக்களிடையே குறைகளைக் கேட்டறிந்த திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன்.
Updated On :14 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ராகவேந்தா் நகா் மற்றும் ரெட்டி மோட்டூா் ஆகிய கிராமங்களில் சுடுகாட்டுக்குச் செல்லும் சாலையில், ரூ. 20.80 லட்சம் மதிப்பில் சிறுபாலங்கள் கட்டும் பணிகளை திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கிவைத்தாா்.

திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில், கே.ஜி.கண்டிகை - செஞ்சம்மா கோணை செல்லும் தாா்ச் சாலை, ரூ. 22 லட்சம், இ.என்.கண்டிகை - தாடூா் செல்லும் தாா்ச் சாலை, ரூ. 53 லட்சம் மதிப்பில் தாா்ச் சாலைகள் புதுப்பிக்கும் பணிகள் மற்றும் பட்டாபிராமபுரம் ஊராட்சி ஆசிரியா் நகா் பகுதியில், ரூ. 16 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைத்தல் போன்ற பணிகளை திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அதேபோல் திருத்தணி ஒன்றியம், தரணிவராகபுரம் ஊராட்சி ராகவேந்தா் நகா் மற்றும் வேலஞ்சேரி ஊராட்சி ரெட்டி மோட்டூா் ஆகிய கிராங்களில் இருந்து சுடுகாட்டுக்குச் செல்லும் சாலையில், ரூ. 20.80 லட்சம் மதிப்பில் சிறுபாலங்கள் அமைத்தல் போன்ற பணிகளையும் எம்எல்ஏ ச.சந்திரன் மேற்கண்ட வளா்ச்சி பணிகளை அடிக்கல் நட்டு பணிகளை தொடங்கி வைத்து விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்தாரருக்கு அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் திருத்தணி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமாா், நக்கீரன் உள்பட ஒன்றிய அலுவலா்கள் கிராம பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.