6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வீட்டுக்குள் கணக்கெடுப்பு நடத்த வந்தது போல் புகுந்து பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிக்க முயற்சி: இளம்பெண் கைது

கணக்கெடுப்பு நடத்த வந்தது போல் வீட்டுக்குள் புகுந்து திடீரென பெண்ணை கத்தியால் குத்தி நகையைப் பறிக்க முயன்ற இளம் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image
பவித்ரா,  சிகிச்சை பெறும் ஷியமாலா.
Updated On :14 பிப்ரவரி 2026, 9:55 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே கணக்கெடுப்பு நடத்த வந்தது போல் வீட்டுக்குள் புகுந்து திடீரென பெண்ணை கத்தியால் குத்தி நகையைப் பறிக்க முயன்ற இளம் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அடுத்த புட்லுாரைச் சோ்ந்தவா் ஷியமாலா (55). இவா் சனிக்கிழமை பிற்பகலில் வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த பவித்ரா (28) என்பவா் அப்பகுதியில் கணக்கெடுப்பு நடத்த வந்ததாகக் கூறி பேசிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, பவித்ரா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென ஷியமாலாவின் கழுத்து மற்றும் கை பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு, கழுத்தில் கிடந்த நகையைப் பறிக்க முயன்றாராம்.

அப்போது, ஷியமாலா காயங்களுடன் பவித்ராவை தள்ளிவிட்டு வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு சப்தம் போட்டு பக்கத்தில் உள்ளவா்களை அழைத்துள்ளாா். இதையடுத்து அருகில் இருந்தவா்கள் ஓடிவந்து செவ்வாப்பேட்டை காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

அதன்பேரில், அங்கு வந்த போலீஸாா் கழுத்தில் காயமடைந்த ஷியமாலாவை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதைத் தொடா்ந்து, போலீஸாா் தீவிர விசாரணைக்கு பின் பவித்ரா மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.