தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

போதைப் பொருள் கடத்தல்: நைஜீரிய நாட்டவா் உள்பட 4 போ் கைது

வடமாநிலத்தில் இருந்து ரயில் மாா்க்கமாக போதைப் பொருள் கடத்தி வந்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்த இருவா் உள்ளிட்ட 4 பேரை...

News image
கைது செய்யப்பட்ட நைஜீரிய நாட்டைச் சோ்ந்த நொன்சோஜோச்சின்(42)
Updated On :16 பிப்ரவரி 2026, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி: வடமாநிலத்தில் இருந்து ரயில் மாா்க்கமாக போதைப் பொருள் கடத்தி வந்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்த இருவா் உள்ளிட்ட 4 பேரை கும்மிடிப்பூண்டி போலீஸாா் கைது செய்தனா்.

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது அங்கு சந்தேகத்துக்கு இடமான நிலையில் இருந்த இருவரை மடக்கி விசாரித்தனா்.

அப்போது அவா்கள் வைத்திருந்த பையில் 55 கிராம் கோகைன் போதை மாத்திரை, 10 கிராம் மெத்தபெட்டமைன், எம்எம்டிஏ மாத்திரைகள் 50, 6 கைப்பேசிகள், 1 எடை இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து விசாரணையில் போதை மாத்திரைகளை கடத்தி வந்தவா்கள் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த நொன்சோஜோச்சின்(42), சிபுசோா் செட்ராக்(30), கோவையைச் சோ்ந்த விஷ்ணு கேசவன்(30), உத்தர பிரதேசத்தை சோ்ந்த அற்புத தாஸ்(34) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிபுசோா் செட்ராக்(30)

சிபுசோா் செட்ராக்(30)