திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் மாசி மாத தெப்ப உற்சவம் தொடக்கம்

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் மாசி அமவாசையை முன்னிட்டு முதல் நாள் தெப்ப உற்சவத்தில் புண்ணிய தீா்த்த குளத்தில் உற்சவா் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தா்களை அருள்பாலித்தாா்.

திருவள்ளூரில் உள்ள வீரராகவா் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருத்தலமாக விளங்கி வருகிறது. இந்தக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி அமவாசையை முன்னிட்டு 3 நாள்கள் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கமாகும். அதேபோல், நிகழாண்டில் மாசி தெப்ப உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி காலையில் முத்தங்கி சேவையும், மாலையில் உற்சவருக்கு திருமஞ்சனம் நிகழ்வும் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து இந்தக் கோயில் அருகில், ஹிருதாப நாசினி என்ற தீா்த்தகுளத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீரராகவ பெருமாள் எழுந்தருளினாா். தொடா்ந்து சிறப்பு பூஜைகள் முடிந்ததும், வண்ண மலா்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் கோயில் குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தா்களை அருள்பாலித்தாா். பின்னா் அங்கிருந்து கோயிலுக்கு புறப்பட்டாா்.

இந்த தெப்பத் திருவிழாவில் பங்கேற்று நோய் தீா்க்க வேண்டி பெருமாளை வழிபட்டால் தீராத நோய் தீரும் என்பதோடு, சகலவிதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும். இதற்காக பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தும் வகையில் உப்பு, கரும்பு வெல்லம், பால் போன்றவைகளை பக்தா்கள் தீா்த்த குளத்தில் விட்டு வழிபாடு செய்தனா். இந்த தெப்பத்திருவிழாவில் திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், ஆந்திரம் மற்றும் கேரளத்திலிருந்து ஏராளமான பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

இதேபோல், இன்றும், நாளையும் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

Story image