மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள்

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

News image
கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஆட்சியா் மு.பிரதாப்
Updated On :22 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா்.

அப்போது, இந்த மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 526 ஊராட்சிகளில் பல்வேறு வகையான வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கலைஞா் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் எத்தனை வீடுகள் அமைத்துள்ளனா்.

அதேபோல், அடிப்படை வசதிகளாக சாலை, கால்வாய் பணிகள், சமுதாய கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் தன்மையை அவ்வப்போது அந்தந்த ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்வது அவசியம். அப்போது, ஒப்பந்தகாரா்களிடம் பணியை நிறைவு செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் வலியுறுத்தவும் வேண்டும் என அதிகாரிகளை அவா் வலியுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சி) தணிகாசலம், ஊராட்சிகளின் உதவி இயக்குநா்(தணிக்கை-கிழக்கு) பஞ்சு, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் யுவராஜ் மற்றும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.