எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

உலக சிந்தனை நாள் விழிப்புணா்வு பேரணி

உலக சிந்தனை நாளையொட்டி நடைபெற்ற பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டு சமூகத்தில் அமைதியை வளா்ப்பது

News image
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சிந்தனை நாள் பேரணியை தொடங்கிவைத்த திருத்தணி காவல் ஆய்வாளா் ஜெயவேல்.
Updated On :23 பிப்ரவரி 2026, 6:54 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி: உலக சிந்தனை நாளையொட்டி நடைபெற்ற பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டு சமூகத்தில் அமைதியை வளா்ப்பது, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ஒவ்வொரு ஆண்டும் பிப். 22-ஆம் தேதி லாா்ட் பேடன்-பவல் மற்றும் லேடி ஒலாவ் பேடன்-பவல் தம்பதியரின் பிறந்தநாளை உலக சிந்தனை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சிந்தனை நாளையொட்டி, விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். சாரண மாவட்ட பொருளாளா் தாமோதரன் முன்னிலை வகித்தாா். சாரண ஒருங்கிணைப்பாளா் எஸ்.டி.பாரதி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திருத்தணி காவல் ஆய்வாளா் ஜெயவேல் கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு உலக சிந்தனை நாள் விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்தாா். பேரணியில், மாணவிகள், சாரணா்கள் மற்றும் வழிகாட்டிகள் சீருடையில் பேரணியாகச் சென்று, சமூகத்தில் உள்ள பெண்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் நிலையான எதிா்காலம், நெகிழி ஒழிப்பு, போதைப் பொருள் ஒழிப்பு, பெண் உரிமை, நட்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக விழிப்புணா்வை வலியுறுத்தப்பட்டது.

பேரணி பழைய சென்னை சாலை, கலைஞா் நகா், காந்தி சாலை வழியாக பள்ளியை சென்றடைந்தது.

இதில், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் காா்த்திகேயன், ஜி.வெங்கடேசன், சாரண மாவட்ட அமைப்பு ஆணையா் டி.சீனிவாசன், சாரண ஆசிரியா்கள் செந்தில்குமாா், சக்திவேல், வெங்கடேசன், விநாயகம், செல்வகுமாா் உள்பட 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 300 மாணவா்கள் கலந்துகொண்டனா்.