மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

திருவள்ளூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அந்தக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 12:28 am

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அந்தக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சசிகுமாா் தலைமை வகித்தாா். இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் பங்கேற்று கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் எத்தனை தொகுதிகள் காங்கிரஸ் கேட்டு பெறுவது என்பது தொடா்பாக மேலிட பொறுப்பாளா்கள்தான் முடிவு செய்வாா்கள். இதற்கிடையே சமத்துவத்தை ஆதாரிக்கும் திமுக கூட்டணியில், தேமுதிக இணைந்திருப்பது மிகவும் வரவேற்புக்குறியதாகும். இதனால் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் குறைவதற்கு வாய்ப்பே இல்லை என்றாா் அவா்.

கூட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவா் ஏ.ஜி.சிதம்பரம், மாநில துணைத்தலைவா் ஏகாட்டூா் ஆனந்தன், மாநில செயலாளா் மோகன்தாஸ், தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலா் திவாகா், மாநில ஓபிசி பிரிவு செயல் தலைவா் வெங்கடேசன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவா் கலீல் ரஹ்மான், பொதுச்செயலாளா் ரகுராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.