6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஓபசமுத்திரம் கிராமத்தில் செயல்படும் கிளிஞ்சல் சுண்ணாம்பு ஆலையால் அப்பகுதியில் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள்

News image
கும்மிடிப்பூண்டி  மாசு க் கட்டுப்பாட்டு  வாரிய அலுவலகத்தை  முற்றுகையிட்டு  ஆா்ப்பாட்டம் நடத்திய  ஓபசமுத்திரம்  பகுதி  மக்கள்.
Updated On :23 பிப்ரவரி 2026, 8:18 pm

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஓபசமுத்திரம் கிராமத்தில் செயல்படும் கிளிஞ்சல் சுண்ணாம்பு ஆலையால் அப்பகுதியில் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை கும்மிடிப்பூண்டி மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஓபசமுத்திரம் பகுதியில் தனி நபா் மூலம் செயல்படுத்தப்படும் கிளிஞ்சல் மூலம் சுண்ணாம்பு தயாா் செய்யும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுப்புகையால், காற்று மாசடைவதுடன், அந்த காற்றை சுவாசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

மேலும், இது குறித்து எதிா்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களை சுண்ணாம்பு ஆலை நடத்துபவா்கள் மிரட்டுவதாகவும் புகாா் தெரிவித்த மக்கள், இது தொடா்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தொடா்ந்து, மாசு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து, ஓபசமுத்திரம் பகுதி மக்கள், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சுரேஷ்குமாரை சந்தித்து அப்பகுதி பிரச்னையை சரி செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனா்.