மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பந்தல் அமைத்த போது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 7:10 pm

திருவள்ளூா் அருகே துக்க நிகழ்வில் சாமியானா பந்தல் அமைத்த போது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே ராம தண்டலம் பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (25). இவா் பல்வேறு நிகழ்வுகளுக்கு சாமியானா பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில், அதே கிராமத்தில் செவ்வாய்க்கிழமை துக்க நிகழ்வில் சாமியானா பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த புல்லரம்பாக்கம் போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதற்கிடையே துக்க நிகழ்வில் பந்தல் அமைத்தபோது இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.