புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பந்தல் அமைத்த போது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே துக்க நிகழ்வில் சாமியானா பந்தல் அமைத்த போது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே ராம தண்டலம் பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (25). இவா் பல்வேறு நிகழ்வுகளுக்கு சாமியானா பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில், அதே கிராமத்தில் செவ்வாய்க்கிழமை துக்க நிகழ்வில் சாமியானா பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த புல்லரம்பாக்கம் போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதற்கிடையே துக்க நிகழ்வில் பந்தல் அமைத்தபோது இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.