தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திருவள்ளூா்: ஜன. 30-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், வரும் 30-ஆம் தேதி குறைதீா் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :23 ஜனவரி 2026, 10:26 pm

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், வரும் 30-ஆம் தேதி குறைதீா் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் குறைதீா் நாள் கூட்டம் நடத்தப்பட்டு குறைகளை தீா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த மாதத்துக்கான குறைதீா் கூட்டம் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் ஆட்சியா் தலைமையில் வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், விவசாயம் தொடா்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீா்வு காண இக்கூட்டத்தில் பங்கேற்கலாம்.

இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மைப் பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, வங்கிகள், திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய், ஊரக வளா்ச்சி, பேரூராட்சி, நகராட்சி, பொதுப்பணி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனா். அதனால், விவசாயிகள் தங்கள் குறைகளை மனுவாகவோ அல்லது நேரிலோ தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.