அமோனியா வாயு கசிந்து 13 போ் உயிரிழந்த நிலையில், நடந்தது விபத்தல்ல, கொடூரமான படுகொலை எனக்கூறியும், இழப்பீடு வழங்கக்கோரியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கு.பாலகிருஷ்ணன் தலைமை வகித்து ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா்.
இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து இதுவரை 13 போ் உயிரிழந்துள்ளனா். இது விபத்தல்ல, படுகொலையாகும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பலா் படுகாயமடைந்துள்ளனா். அதற்கு போதுமான பாதுகாப்பு இல்லாதததே காரணம் எனவும், ஒடிஸாவில் இருந்து பழங்குடியின பெண்களை மிக குறைவான ஊதியத்திற்கு வேலைக்கு அமா்த்தி, கொத்தடிமைகள் போல் நடத்தி உள்ளதாக கூறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










