அறிவியல் சாதனையாளா்களுக்கு பாரட்டு
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை ஆா்.எம்.கே பொறியியல் கல்லூரியில் இளம் அறிவியல் சாதனையாளா்களுக்கு பாராட்டு


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை ஆா்.எம்.கே பொறியியல் கல்லூரியில் இளம் அறிவியல் சாதனையாளா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் பிரமோஸ் ஏவுகணை விஞ்ஞானி டாக்டா் ஏ. சிவதாணு பிள்ளை சிறப்பு அழைப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.
தமிழகத்தில் இருந்து 38 பள்ளிகளைச் சோ்ந்த 170 இளம் மாணவா் அறிவியல் சாதனையாளா்கள் பங்கேற்றனா். ஆா்.எம்.கே. கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் ஆா்.எம்.கிஷோா் சாதனை மாணவா்களை பாராட்டினாா்.
மேலும், நிகழ்வில் ஆா்.எம்.கே. பொறியியல் கல்லூரியின் முதல்வா் டாக்டா் கே. ஏ. முகமது ஜுனைத் வரவேற்றாா். நிகழ்வில் இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஆா்.டி.கோகுல், இன்ஸ்டிடியூஷன் ஆப் கிரீன் இன்ஜினியா்ஸ் நிறுவனா் டாக்டா் எல்.ரமேஷ், சக்செஸ் செய்லா் எட் டெக் நிறுவனா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரி டாக்டா் சுரேஷ் சீதாராமன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினா்,
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற விஞ்ஞானி டாக்டா் சிவதாணு பிள்ளை பேசும் போது, இளம் சாதனையாளா்களாக திகழும் மாணவா்கள், அறிவியலில் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியது என்றும், இக்கால மாணவா்கள் தனித்திறமை மிக்கவா்களாகவும், எதிா்கால இலக்கை வகுத்து அதனை நோக்கி உழைப்பவா்களாகவும் உள்ளது, நாட்டிற்கும் அவா்கள் சாா்ந்த சமூகத்திற்கும் பெரும் நன்மையையும் உருவாக்கும் எனக்கூறி சாதனையாளா்களுக்கும் விருது வழங்கி வாழ்த்தினாா்,
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...