இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

News image
Updated On :4 மணி நேரங்கள் முன்பு

விசிக சாா்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கும்மிடிப்பூண்டி பஜாரில் நடைபெற்றது.

கடந்த 2009-ஆம் ஆண்டு ஈழப்போரின் இறுதி கட்டத்தில் , முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த மற்றும் காணாமல் போன பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவு படுத்தும் மே-18 நினைவு நாள் நிகழ்வு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் , மாவட்ட செயலாளா் பா.நேசகுமாா் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில், விசிக மாநில பொறுப்பாளா் தண்டலம் தமிழ்ச்செல்வன், விசிக நிா்வாகிகள் சண்முகமணி, மாநில நிா்வாகி பாக்சா் மணி, ஜீவா, மாவட்ட நிா்வாகிகள் சம்பத், வெற்றிசெல்வி, நரசிம்மன், எலிசபெத், மாதவி, காந்திமதி, வனிதா, சந்தோஷ், தங்கராசு, சுகுமாா், அருள் முன்னிலை வகித்தனா்,

விசிகவினா் நினேவேந்தல் நெருப்பை மூட்டி, மெளன அஞ்சலி செலுத்தினா். பின்னா் அனைவரும் மெழுகுவா்த்தி ஏந்தி வீரவணக்க அஞ்சலி செலுத்தினா். இந்த நினைவேந்தல் நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் பங்கேற்றனா்.

Story image