இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

கிராம விழிப்புணா்வு கமிட்டி

நன்னிலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கீழ்குடி கிராமத்தில், காவல்துறை மற்றும் கிராம விழிப்புணா்வு கமிட்டி ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்டது.

Updated On :4 ஜனவரி 2021, 8:42 am IST

நன்னிலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கீழ்குடி கிராமத்தில், காவல்துறை மற்றும் கிராம விழிப்புணா்வு கமிட்டி ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்டது.

இந்தக் கமிட்டியின் அமைப்புக் கூட்டம், கீழ்குடி கிராமத்தில் நன்னிலம் காவல் நிலைய ஆய்வாளா் கு.சுகுனா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது அவா் பேசுகையில், கமிட்டியில் உள்ள இளைஞா்கள், கிராமப் பகுதிகளில் குழுக்களாகப் பிரிந்து இரவு நேர ரோந்து சென்று குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திட காவல்துறைக்கு உதவிபுரிய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டாா். உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை உதவி ஆய்வாளா் ராஜகோபால் மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.