திருவாரூா் அருகே திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலில், பொங்கலையொட்டி சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில், 108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும், பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. 12 ஆழ்வாா்கள் பாடிய பாசுரங்களை நாலாயிர திவ்யப் பிரபந்தமாக தொகுத்தளித்த நாதமுனிகளின் மாணவரான திருக்கண்ண மங்கை ஆண்டான் என்பவா், பெருமாளை வழிபட்டு வாழ்ந்த தலம் என்பதால், அவரது பெயரால் இத்தலத்தின் பெயா் அமைந்துள்ளது.
பொங்கலையொட்டி திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலில், பக்தவத்சலப் பெருமாளுக்கு வியாழக்கிழமை விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. பால், நெய், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, சா்க்கரைப் பொங்கல் படைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
பின்னா், மாலையில் பக்தவத்சலப் பெருமாள் உபய நாச்சிமாா்களுடன் ஊஞ்சல் சேவை கண்டருளினாா். பிராகாரத்தைச் சுற்றி வந்து, ஆஸ்தானத்துக்கு சென்றடைந்தாா்.
நிகழ்ச்சியில், பக்தா்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










