உழவுத் தொழிலுக்கு உம்பளச்சேரி மாடுகள்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த உம்பளச்சேரி கிராமத்தில் உருவான உம்பளச்சேரி இன மாடுகள் உழவுத் தொழிலுக்கும், சத்து மிகுந்த பாலுக்கும் பெயர் பெற்றது.
உழவுத் தொழிலுக்கு உம்பளச்சேரி மாடுகள்
Published on
Updated on
1 min read

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த உம்பளச்சேரி கிராமத்தில் உருவான உம்பளச்சேரி இன மாடுகள் உழவுத் தொழிலுக்கும், சத்து மிகுந்த பாலுக்கும் பெயர் பெற்றது.
 ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சேற்று உழவுக்கான சிறந்த மாடு என்ற பெருமையைப் பெற்றவை உம்பளச்சேரி இனக் காளைகள். மேலும், தேசிய அளவில் கடின உழைப்புக்கான மாடுகள் என்ற பரிசுகளையும் பெற்றுள்ளன.
 நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பரவலாக வளர்க்கப்படும் இந்த இனப் பசுக்களின் பால் ருசியாகவும், சத்து மிக்கதாகவும் இருக்கும். உழவுத்தொழில் இயந்திரமயமாகி வருவது, பாக்கெட் பால் விற்பனை அதிகரிப்பு, கால்நடை வளர்ப்பில் ஏற்படும் பிரச்னைகள் போன்ற காரணங்களால் மாடு வளர்ப்புத் தொழில் நசிந்து வரும் நிலையில் உள்ளது.
 அதேநேரத்தில், பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் உம்பளச்சேரி இன மாடுகள் வளர்ப்புத் தொழிலை சங்கம் அமைத்து பாதுகாத்து வருவதில் முனைப்பு காட்டி வருகின்றனர் உம்பளச்சேரி மற்றும் சுற்றுப் பகுதி கிராம விவசாயிகள்.
 கே.பி. அம்பிகாபதி, வேதாரண்யம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com