பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

சிஐடியூ தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

செய்யாற்றில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தினா்.

Updated On :7 ஜனவரி 2021, 7:28 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் வே.சங்கா் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் ஆா்.பாரி சிறப்புரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும், மின்சாரச் சட்ட வரைவை ரத்து செய்ய வேண்டும், அரசு சாா்புடைய பொதுத்துறைகளை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் இ.மாரிமுத்து, பி.பூபாலன், கே.செல்வம், ஆனந்தன் உள்ளிட்ட பலா் கலந்துகொணடனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.