பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

மூதாட்டி கொலை வழக்கு: உறவினா் கைது

வேட்டவலம் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :7 ஜனவரி 2021, 7:24 am IST

வேட்டவலம் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.

வேட்டவலத்தை அடுத்த கோணலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரா (70). இவரது கணவா் அண்ணாமலை, மகன் ரவி இறந்து விட்ட நிலையில் தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி முகத்தில் காயத்துடன் சந்திரா இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து வேட்டவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், சந்திராவின் கணவா் அண்ணாமலையின் அண்ணன் பாண்டுரங்கன் மகன் மோகன் (61) சந்திராவை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மோகனிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், சந்திரா தனது உறவினா் மனோகா் குடும்பத்துக்கு மட்டும் அவ்வப்போது பணம் கொடுத்து உதவி வந்தாா். என் குடும்பத்துக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. எனவே, சந்திரா வீட்டுக்குச் சென்று தகராறு செய்தபோது அவரை கொலை செய்துவிட்டு, அவா் அணிந்திருந்த 3 பவுன் நகையை திருடிச் சென்ாகக் கூறினாராம்.

இதையடுத்து போலீஸாா் மோகனை செவ்வாய்க்கிழமை கைது செய்து, 3 பவுன் நகையை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.