
பொதுத் துறையைச் சேர்ந்த பி.எச்.இ.எல். நிறுவனம், கடந்த நிதியாண்டுக்கு 100 சதவீத ஈவுத் தொகையை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தின் செயல்பாடு மிகச் சிறப்பான அளவில் இருந்து வருகிறது. அதன் காரணமாகவே, பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகை வழங்கும் நிறுவனத்தின் நடவடிக்கையில் குறைகளைச் சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு உள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் கடந்த 2018-19 நிதியாண்டுக்கு கூடுதலாக 60 சதவீத இறுதி ஈவுத்தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஏற்கெனவே வழங்கப்பட்ட 40 சதவீத இடைக்கால ஈவுத் தொகையையும் (மதிப்பின் அடிப்படையில் இது ரூ.279 கோடி) சேர்த்து கடந்த நிதியாண்டுக்கு 100 சதவீத ஈவுத் தொகை பங்குதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது என பி.எச்.இ.எல் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.