ஜனவரி
5: இந்தியாவிலிருந்து லண்டனுக்குத் தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை தலைமறைவு நிதி மோசடியாளர் என மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு.
பிப்ரவரி
4: லண்டனில் தலைமறைவாக உள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சர் ஒப்புதல். இதற்கான உத்தரவில் பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் சஜித் ஜாவித் கையெழுத்திட்டார்.
19: புதிய தேசிய மின்னணுவியல் கொள்கை-2019-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். இக்கொள்கையின்படி, வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் மின்னணு துறையில் ரூ. 26 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகத்தில் ஈடுபடவும், இதன்மூலம் நாடு முழுவதும் 1 கோடி பேருக்கு புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முடிவு.
மே
20: சர்வதேச எடை அலகுகள் அமைப்பின் 7 அடிப்படை அலகுகளில் நான்கான கிலோகிராம், கெல்வின், மோல், ஆம்பியர் ஆகியவற்றை மறுவரையறை செய்வதற்கு 60 நாடுகள் ஒப்புக் கொண்டு இயற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஏற்றுக் கொண்டது.
ஜூலை
12: உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிதி அலுவலர் பொறுப்பில் பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் அன்சுலா காந்த் நியமிக்கப்பட்டார்.
ஆகஸ்ட்
30: வங்கித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக பல்வேறு பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டன. இந்த இணைப்பு நடவடிக்கையால், 27-ஆக இருந்த பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கை 12-ஆக குறைந்தது.
செப்டம்பர்
18: இ-சிகரெட் தயாரிப்பு, இறக்குமதி, விற்பனைக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை முடிவு.
அக்டோபர்
23: பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களை இணைக்கும் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
நவம்பர்
6: ஒன்றாக இணைக்கப்பட்ட பிஎஸ்என்எல் மற்றும் எம்எடிஎன்எல் (மகாநகர் டெலிபோன் நிகம் லிமிடெட்) பொதுத் துறை நிறுவனங்கள், பணியாளர்களுக்கான விருப்ப ஓய்வுத் திட்டத்தை (விஆர்எஸ்) அறிவித்தன.
டிசம்பர்
15: நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், கால விரயத்தைத் தவிர்த்தல், எரிபொருள் வீணாவதைத் தடுத்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக "ஃபாஸ்டேக்' முறையில் பணம் செலுத்தும் திட்டம் அமலுக்கு வந்தது.