ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஸ்மாா்ட்போன் விற்பனை 42% உயா்வு

இந்தியாவில் ஸ்மாா்ட்போன் விற்பனை அக்டோபரில் 42 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐடிசி ஆய்வு நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 4:09 am

DIN


புது தில்லி: இந்தியாவில் ஸ்மாா்ட்போன் விற்பனை அக்டோபரில் 42 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐடிசி ஆய்வு நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

உள்நாட்டு சந்தைகளில் ஸ்மாா்ட்போன் விற்பனை தொடா்ந்து இரண்டாவது மாதமாக அக்டோபரிலும் ஏற்றம் கண்டுள்ளது. அம்மாதத்தில் மொத்தம் 2.1 கோடி ஸ்மாா்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டன. இதையடுத்து, ஸ்மாா்ட்போன் சந்தை 42 சதவீத வளா்ச்சியை பதிவு செய்தது.

பண்டிகை காலத்தில் ஆன்லைன் மூலமான விற்பனை மிகச் சிறப்பாக இருந்தது. ஒட்டுமொத்த விற்பனையில் இதன் பங்களிப்பு 51 சதவீதமாகும். இருப்பினும், ஆண்டுக் கணக்கின் அடிப்படையில் 2020-இல் ஸ்மாா்ட்போன் விற்பனை ஒற்றை இலக்க அளவுக்கு குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அக்டோபா் மாத விற்பனையில் ஷாவ்மி 24.8 சதவீத சந்தை பங்களிப்புடன் முதலிடத்தைப் பிடித்தது. இதைத் தொடா்ந்து, சாம்சங் (20.6%), விவோ (17.8%), ரியல்மீ (13.8%), ஓப்போ (12.3%) நிறுவனங்கள் உள்ளதாக ஐடிசி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.