சியோல் உணவகத்தில் எல்.ஜி நிறுவனம் அறிமுகப்படுத்திய ரோபோக்கள்!

சியோலில் உள்ள ஒரு உணவகத்தில் எல்ஜி நிறுவனம் ரோபோக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
சியோல் உணவகத்தில் எல்.ஜி நிறுவனம் அறிமுகப்படுத்திய ரோபோக்கள்!
Published on
Updated on
1 min read

சியோலில் உள்ள உணவகத்தில் எல்ஜி நிறுவனம்வாடிக்கையாளர்களின் சேவைக்காக ரோபோக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

தென் கொரிய தலைநகரான சியோலில் உள்ள உணவகத்தில் 'க்ளோய் சர்வ்போட்' என்ற ரோபோவை எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.  

உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை வரவேற்பதோடு, உணவுகளை டெலிவரி செய்கிறது. ஒரே நேரத்தில் தனது நான்கு அடுக்குகளில் உணவுகளை எடுத்து வருகிறது. சாப்பிட்டு முடிந்த பின்னர் தட்டு உள்ளிட்ட பொருட்களையும் எடுத்து வருகிறது.  

இதுகுறித்து உணவக மேலாளர் கூறும்போது, 'வாடிக்கையாளர்கள் ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தட்டுகளை எடுத்துச் செல்ல முடியாது. சில நேரங்களில் கனத்த தட்டுகள் என்றால் ஒவ்வொன்றாகத்தான் எடுத்துச் செல்ல முடியும். எனவே, ரோபோக்கள் எங்களது வேலையை மிகவும் எளிதாக்கியுள்ளது' என்று தெரிவித்தார். 

முன்னதாக நவம்பரில், நூடுல்ஸ் தயாரிப்பதற்கென ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதேபோன்று மருத்துவமனைகளில் குழந்தைகளைப் பராமரிப்பதற்கு உதவுவதற்காக சியோல் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் ரோபோக்களை ஈடுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com