
தூத்துக்குடி: மத்திய அரசின் ஓய்வூதியத் திட்ட கணக்கு (அடல் பென்ஷன் யோஜனா) தொடங்குவதில் தனியார் துறை வங்கிகளிலேயே தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து வங்கியின் பொது மேலாளர் சூரியராஜ் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய ஓய்வூதியத் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (அற்ஹப் டங்ய்ள்ண்ர்ய் வர்த்ஹய்ஹ) திட்டத்தின் மூலம் அரசாங்க உத்தரவாத ஓய்வூதியமாக ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.5,000 வரை வழங்கப்படுகிறது.
நிகழ் நிதியாண்டில் அனைத்து வங்கிகளின் மூலம் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் அரசு நிர்ணயித்த 2500 கணக்கு எண் தொடங்க வேண்டும் என்ற இலக்கை விட கூடுதலாக 371.60 மடங்கு வளர்ச்சியை அளித்து 9290 கணக்குகளை தொடங்கி அனைத்து தனியார் துறை வங்கிகளிலேயே மெர்க்கன்டைல் வங்கி முதலிடம் பெற்றது.
இதன் மூலம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அரசின் அனைத்து நலத் திட்டங்களிலும் முழு உத்வேகத்துடன் பங்கேற்று மக்களுக்கு அளவற்ற சேவையை செய்து வருகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...