செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

2020-இல் கூடுதல் வருவாயைப் பெற்ற யூடியூப் செயலி

புதிய ஆய்வு தரவுகளின்படி அதிக வருவாயைப் பெறும் முதல் 100 பயனர் செயலிகள் கடந்த 2019 ஆண்டைக் காட்டிலும் 2020ஆம் ஆண்டு கூடுதல் வருவாயை ஈட்டியுள்ளன.

News image

2020-இல் கூடுதல் வருவாயைப் பெற்ற பயனர் செயலிகள்

Updated On :28 ஜனவரி 2024, 1:00 am IST

புதிய ஆய்வு தரவுகளின்படி அதிக வருவாயைப் பெறும் முதல் 100 பயனர் செயலிகள் கடந்த 2019 ஆண்டைக் காட்டிலும் 2020ஆம் ஆண்டு கூடுதல் வருவாயை ஈட்டியுள்ளன.

நாளுக்கு நாள் தொழில்நுட்ப உலகம் மாற்றம் கண்டு வருகிறது. தினந்தோறும் புத்தம்புதிய செயலிகள் உருவாகியும், பழைய செயலிகள் புதிய பயனர்களைப் பெற்றும் இயங்கி வருகின்றன. 

இந்நிலையில் பயன்பாட்டு செயலிகள் மீதான சமீபத்திய ஆய்வில் 2020ஆம் ஆண்டில், பயனர் செயலிகளின் வருவாய் 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. 

கடந்த 2020ஆம் ஆண்டு  விளையாட்டு அல்லாத, அதிக வருவாய் ஈட்டும் முதல் 100 செயலிகளின் வருவாய் 103 கோடி டாலரை எட்டியுள்ளது. இது 2019ஆம் ஆண்டில் 78 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் கூட்டுறவு வகையிலான அதிக வருவாய் ஈட்டும் முதல் 100 செயலிகளின் வருவாய் 27 கோடி டாலர்கள் வருவாயை ஈட்டியுள்ளன. இவை கடந்த 2019ஆம் ஆண்டு 19 கோடி டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

யூடியூப் செயலியானது அதிக வருவாயைப் பெறும் செயலிகளில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம் மட்டும் உலக அளவில் 44.5 கோடி டாலர்கள் வருவாயை பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.