புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

தூக்கக் கோளாறுகளை கண்காணிக்கும் அலெக்ஸா: அமேசான் திட்டம்

பயனாளர்களுக்கு தூக்கத்தில் இருக்கும் கோளாறுகளை கண்காணிக்கும் வகையில் நவீன அலெக்ஸாவை உருவாக்க அமேசான் திட்டமிட்டுள்ளது.

News image

தூக்கத்தில் இருக்கும் கோளாறுகளை கண்காணிக்கும் அலெக்ஸாவை உருவாக்க அமேசான் திட்டம்

Updated On :7 ஜனவரி 2021, 3:05 pm IST

பயனாளர்களுக்கு தூக்கத்தில் இருக்கும் கோளாறுகளை கண்காணிக்கும் வகையில் நவீன அலெக்ஸாவை உருவாக்க அமேசான் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், உள்ளங்கை அளவுள்ள அலெக்ஸா கருவியை உருவாக்கி வருவதாகவும், இது படுக்கையறையில் படுக்கைக்கு அருகே வைத்திருந்தால், பயனாளியின் மூச்சுக்காற்றின் வேகத்தை உணரும் மிகத் துல்லியமான ரேடார் அலை மூலமாக கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தக் கருவி பிரம்ஸ் என்ற குறிப்புப் பெயருடன் உருவாக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தயாரிப்புப் பணி தற்போது எந்தநிலையில் இருக்கிறது என்பது குறித்து  வெளியிட அமேசான் மறுத்துவிட்டது.

ஒருவேளை நீங்கள் மிக சத்தமான குறட்டையுடன் இரவு முழுவதும் நன்றாக உறங்கினாலும், சோர்வாகவே உணர்வீர்கள். இதுதான் உறக்கக் கோளாறு. 

இதற்கு முன்பு, 2014-ஆம் ஆண்டில் ஜப்பான் நிறுவனமான நின்டென்டோ, அணிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லாத, ரேடியோ அலைக்கற்றை வாயிலாக உறக்கத்தை கண்காணிக்கும் கருவியை அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் அந்த கருவி அறிமுகமாகவேயில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.