ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

தூக்கக் கோளாறுகளை கண்காணிக்கும் அலெக்ஸா: அமேசான் திட்டம்

பயனாளர்களுக்கு தூக்கத்தில் இருக்கும் கோளாறுகளை கண்காணிக்கும் வகையில் நவீன அலெக்ஸாவை உருவாக்க அமேசான் திட்டமிட்டுள்ளது.

News image

தூக்கத்தில் இருக்கும் கோளாறுகளை கண்காணிக்கும் அலெக்ஸாவை உருவாக்க அமேசான் திட்டம்

Updated On :28 ஜனவரி 2024, 12:44 am IST

பயனாளர்களுக்கு தூக்கத்தில் இருக்கும் கோளாறுகளை கண்காணிக்கும் வகையில் நவீன அலெக்ஸாவை உருவாக்க அமேசான் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், உள்ளங்கை அளவுள்ள அலெக்ஸா கருவியை உருவாக்கி வருவதாகவும், இது படுக்கையறையில் படுக்கைக்கு அருகே வைத்திருந்தால், பயனாளியின் மூச்சுக்காற்றின் வேகத்தை உணரும் மிகத் துல்லியமான ரேடார் அலை மூலமாக கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தக் கருவி பிரம்ஸ் என்ற குறிப்புப் பெயருடன் உருவாக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தயாரிப்புப் பணி தற்போது எந்தநிலையில் இருக்கிறது என்பது குறித்து  வெளியிட அமேசான் மறுத்துவிட்டது.

ஒருவேளை நீங்கள் மிக சத்தமான குறட்டையுடன் இரவு முழுவதும் நன்றாக உறங்கினாலும், சோர்வாகவே உணர்வீர்கள். இதுதான் உறக்கக் கோளாறு. 

இதற்கு முன்பு, 2014-ஆம் ஆண்டில் ஜப்பான் நிறுவனமான நின்டென்டோ, அணிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லாத, ரேடியோ அலைக்கற்றை வாயிலாக உறக்கத்தை கண்காணிக்கும் கருவியை அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் அந்த கருவி அறிமுகமாகவேயில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.