பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வாட்ஸ்ஆப் பயன்பாட்டைத் தொடர வேண்டுமா? - 79% இந்தியர்கள் மறுபரிசீலனை

புதிய தனியுரிமைக் கொள்கை குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கமளித்த போதிலும், வாட்ஸ்ஆப்பை இனியும் தொடர வேண்டுமா என 79 சதவீத இந்தியர்கள் மறுபரிசீலனை செய்கின்றனர். 

News image
கோப்புப்படம்
Updated On :29 ஜனவரி 2021, 12:58 pm

DIN

புதிய தனியுரிமைக் கொள்கை குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கமளித்த போதிலும், வாட்ஸ்ஆப்பை இனியும் தொடர வேண்டுமா என 79 சதவீத இந்தியர்கள் மறுபரிசீலனை செய்கின்றனர். 

புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்ஆப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றும் புதிய விதிமுறைகளை ஏற்காவிடில் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியாது என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறியிருந்தது.  இதையடுத்து தங்களது தனிப்பட்ட தகவல்களை வாட்ஸ்ஆப் சேமிக்கிறது என்ற அச்சத்திலும் புதிய விதிமுறைகளாலும் பலர் மாற்று செயலியை நோக்கித் திரும்பினர். 

இந்நிலையில் இந்த நடவடிக்கை பயனரின் தனிப்பட்ட நண்பர்கள் அல்லது குடும்பத்தினரின் தனியுரிமையை பாதிக்காது என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கமளித்தது. 

எனினும் பலர் இதற்கு இடைப்பட்ட காலத்தில் மாற்று செயலியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தற்போதைய பயன்பாட்டாளர்களில் 79 சதவீத இந்தியப் பயனர்கள் வாட்ஸ்ஆப்பை தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமா என மறுபரிசீலனை செய்து வருவதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

குருகிராமைச் சேர்ந்த சைபர் மீடியா ரிசர்ச் நடத்திய ஆய்வில், 79 சதவீதத்தினர் வாட்ஸ்ஆப்பைத் தொடர வேண்டுமா என மறுபரிசீலனை செய்கிறார்கள், அவர்களில் 28 சதவீதம் பேர் மே 2021ல் அதன் புதிய கொள்கையை அமல்படுத்திய பின்னர் வாட்ஸ்ஆப்பை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளனர் என்று கூறியுள்ளது. 

கணக்கெடுக்கப்பட்டவர்களில் 41 சதவீதம் பேர் டெலிகிராமிற்கும், 35 சதவீதம் பேர் சிக்னல் செயலிக்கும் மாற விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ்ஆப்பின் புதிய கொள்கை குறித்த அறிவிப்பு தொடர்பாக 10 சதவீதம் பேர் அலட்சியமாக உள்ளனர். 49 சதவீதம் பேர் கோபம் அடைந்ததாகவும், வாட்ஸ்ஆப் மீதான நம்பிக்கை போய்விட்டது என்று 45 சதவீதம் பேரும், நம்பிக்கை மீறல் என 35 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.