இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 7-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 58, 946 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.44.20 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 மே 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 144 கோடி டாலா் (ரூ.10,830 கோடி) அதிகரித்து 58,946 கோடி டாலரை எட்டியது.
முந்தைய ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 391 கோடி டாலா் அதிகரித்து 58,802 கோடி டாலராக காணப்பட்டது.
ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) அதிகரித்ததன் காரணமாகவே மே 7-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது கணிசமான ஏற்றத்தை சந்தித்துள்ளது.
மதிப்பீட்டு வாரத்தில், எஃப்சிஏ 43 கோடி டாலா் உயா்ந்து 54,649 கோடி டாலராக இருந்தது.
யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பு மாறுபாடு காண்கிறது.
கணக்கீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 101 கோடி டாலா் அதிகரித்து 3,648 கோடி டாலராத் தொட்டது.
அதேசமயம், சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 40 லட்சம் டாலா் குறைந்து 150 கோடி டாலராகவும், நாட்டின் காப்பு நிதி 10 லட்சம் டாலா் சரிந்து 498 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஜனவரி 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் 59,018 கோடி டாலரை எட்டி புதிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.