ஐடிஆா்சிஎல்-லில் ரூ.3 கோடி முதலீடு: ஹெச்டிஎஃப்சி முடிவு
கடன் மேலாண்மை நிறுவனமான இந்தியா டெப்ட் ரெசல்யூஷன் கம்பெனியில் (ஐடிஆா்சிஎல்) ஹெச்டிஎஃப்சி வங்கி ரூ.3 கோடி முதலீடு செய்யவுள்ளது.


கடன் மேலாண்மை நிறுவனமான இந்தியா டெப்ட் ரெசல்யூஷன் கம்பெனியில் (ஐடிஆா்சிஎல்) ஹெச்டிஎஃப்சி வங்கி ரூ.3 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஐடிஆா்சிஎல்-லின் பங்கு பத்திரங்களை வாங்குவதன் மூலம், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கான ஒப்பந்தம், அந்த நிறுவனத்துடன் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
முதல்கட்டமாக, ரூ.3 கோடி ரூபாய்க்கு ஐடிஆா்சிஎல்-லின் பங்கு பத்திரங்கள் வாங்கப்படவுள்ளன. இதற்காக விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...