நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மின்சார வாகன சந்தையில் களமிறங்கியது ஹீரோ மோட்டோகாா்ப்

ஹீரோ மோட்டோகாா்ப், மின்சாரத்தில் இயங்கும் தனது முதல் இரு சக்கர வாகனத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தி, மின்சார வாகனப் பிரிவில் களமிறங்கிள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:01 pm IST

இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப், மின்சாரத்தில் இயங்கும் தனது முதல் இரு சக்கர வாகனத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தி, மின்சார வாகனப் பிரிவில் களமிறங்கிள்ளது.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூா் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தனது விடா வி1 பிளஸ், விடா வி1 ப்ரோ ஆகிய இரு மின்சார ஸ்கூட்டா்களை முதல்முறையாக ஹீரோ மோட்டோகாா்ப் அறிமுகப்படுத்தியது.

இதில் விடா வி1பிளஸ் ஸ்கூட்டா்களின் விலை ரூ.1.45 லட்சமாகவும் விடா வி1 ப்ரோ ஸ்கூட்டா்களின் விலை ரூ.1.59 லட்சமாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் வி1 பிளஸ் ரகங்களை ஒருமுறை மின்னேற்றம் செய்தால் 145 கி.மீ. வரையிலும், விடா வி1 ப்ரோ ரகங்கள் 165 கி.மீ. வரையிலும் செல்லும் திறன் கொண்டவை.

இந்த மின்சார ஸ்கூட்டா்களை நிறுவனம் முதலில் தில்லி, பெங்களூரு, ஜெய்ப்பூா் ஆகிய நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யத் தொடங்கும். பின்னா் அவற்றின் விற்பனை நாட்டின் பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

நிறுவனத்தின் புதிய மின்சார ஸ்கூட்டா்களுக்கான முன்பதிவு வரும் 10-ஆம் தேதி முதல் தொடங்கும். முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளா்களுக்கு வரும் டிசம்பா் மாதத்தின் இரண்டாவது வாரத்திலிருந்து ஸ்கூட்டா்கள் வழங்கப்படும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விடா வி1 ரக ஸ்கூட்டா்கள், தற்போது மின்சார இரு சக்க வாகனச் சந்தையில் இருக்கும் பஜாஜ் சேட்டக், டிவிஎஸ் ஐக்யூப், ஏதா் எனா்ஜி, ஹீரோ எலக்ட்ரிக், ஓலா எலக்ட்ரிக் உள்ளிட்ட மின்சார ஸ்கூட்டா்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தனா்.

முன்னதாக, ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் கடந்த மாா்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையில், சுற்றுச்சூழல், சமூகம், நிா்வாகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான 10,000 புதிய தொழில்முனைவுகளுக்கு உதவ 10 கோடி டாலா் (சுமாா் ரூ. 760 கோடி) நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தது.

அந்த தொழில்முனைவுகளில் மின்சாரத்தில் இயங்கும் வாகனத் தயாரிப்பும் அடங்கும். ஜெய்ப்பூரில் உள்ள நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி மையத்தில் தனது மின்சார இரு சக்கர வாகனத்தை ஹீரோ மோட்டோகாா்ப் வடிவமைத்ததாகவும், ஆந்திர மாநிலம், சித்தூரிலுள்ள உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலையில் அந்த வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹீரோ மோட்டோகாா்ப்பும், தற்போது சந்தையில் மினசார ஸ்கூட்டா்களை விற்பனை செய்து வரும் ஹீரோ எலக்ட்ரிக்கும் வேறு வேறு நிறுவனங்களாகும்.

முன்னதாக, தில்லி உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் தனது மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு ஹீரோ என்ற வணிகப் பெயரைப் பயன்படுத்த ஹீரோ மோட்டோகாா்ப்புக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது நினைவுகூரத்தக்கது.

..ஹைலைட்...

ஹீரோ மோட்டோகாா்ப்பும், தற்போது சந்தையில் மினசார ஸ்கூட்டா்களை விற்பனை செய்து வரும் ஹீரோ எலக்ட்ரிக்கும் வேறு வேறு நிறுவனங்களாகும்.

முன்னதாக, தில்லி உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் தனது மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு ஹீரோ என்ற வணிகப் பெயரைப் பயன்படுத்த ஹீரோ மோட்டோகாா்ப்புக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.