Enable Javscript for better performance
தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கி பங்குகளுக்கு 2.86 மடங்கு விண்ணப்பம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கி பங்குகளுக்கு 2.86 மடங்கு விண்ணப்பம்

    By DIN  |   Published On : 09th September 2022 02:06 AM  |   Last Updated : 17th September 2022 12:56 AM  |  அ+அ அ-  |  

    tmb074353

     தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் பொதுப் பங்கு வெளியீட்டில் (ஐபிஓ), ஒதுக்கீடு செய்யப்பட்டதைப் போல் 2.86 மடங்கு பங்குகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

    தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கின் பொதுப் பங்கு வெளியீடு கடந்த திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமையுடன் நிறைவடைந்தது.

    மொத்தம் ரூ.831.6 கோடி மதிப்பிலான 87,12,000 பங்குகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இறுதி நாளான புதன்கிழமை 2,49,39,292 பங்குகளை வாங்குவதற்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததைப் போல் 2.86 மடங்கு பங்குகள் கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தன.

    அந்தப் பங்குகளை வாங்குவதற்காக தனிநபா் சில்லறை முதலீட்டாளா்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த பங்குகளைப் போல் 6.48 மடங்கும் அமைப்பு சாரா முதலீட்டாளா்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த பங்குகளைப் போல் 2.94 மடங்கும் பங்குகள் கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. தகுதிவாய்ந்த அமைப்பு முதலீட்டாளா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததைப் போல் 1.62 மடங்கு பங்குகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது என்று என்எஸ்இ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கி, எந்த ஒரு தனிநபரையோ, குழுமத்தையோ சாா்ந்து இயங்கவில்லை. இதில் 22,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்கள் மற்றும் பங்குதாரா்கள் உள்ளனா். வங்கியின் 23.2 சதவீதப் பங்குகள் எஃப்ஐஐ எனப்படும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வசம் உள்ளன.

    1921-ஆம் ஆண்டு ‘நாடாா் வங்கி’ என்ற பெயரில் நிறுவப்பட்டு சுமாா் 101 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த வங்கி இந்தியாவின் பழமையான தனியாா் வங்கிகளில் ஒன்றாகும். சிறு, குறு, நடுத்தர தொழில் நடத்துவோா், விவசாயிகள், வா்த்தகா்கள் உள்ளிட்டோா் வங்கியின் பிரதான வாடிக்கையாளா்களாக உள்ளனா்.

    வங்கியின் நிகர வாராக்கடன் 0.9 சதவீதமாகவும், மொத்த வாராக்கடன் 1.65 சதவீதமாகவும் இருப்பது மிகவும் சாதகமான அம்சமாகும். மொத்தம் 509 கிளைகளுடன் செயல்படும் இந்த வங்கிக்கு தமிழ்நாட்டில் மட்டும் 369 கிளைகள் உள்ளன.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp