டிஎல்எஃப் நிகர லாபம் 37% உயர்வு!

ரியால்டி நிறுவனமான டிஎல்எஃப் லிமிடெட் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 37 சதவீதம் அதிகரித்து ரூ.519.21 கோடியாக உள்ளது.
டிஎல்எஃப் நிகர லாபம் 37% உயர்வு!
Published on
Updated on
1 min read

புதுதில்லி: டிஎல்எஃப் நிறுவனத்தின் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 37 சதவீதம் அதிகரித்து ரூ.519.21 கோடியாக உள்ளது. அதன் நிகர லாபம் முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.379.48 கோடியாக இருந்தது.

எவ்வாறாயினும், மொத்த வருமானம், இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.1,686.92 கோடியிலிருந்து ரூ.1,559.66 கோடியாக குறைந்துள்ளது.

சந்தை மூலதனத்தின் அடிப்படையில் டிஎல்எஃப் இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாகும். இந்த நிதியாண்டில் ரூ.8,000 கோடிக்கும் அதிகமான விற்பனை முன்பதிவுகளை இலக்காகக் கொண்டுள்ளது டிஎல்எஃப். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com